நம்பிக்கை துரோகம்...!


வேம்பிடம் பாம்பை கண்டேன்

துளசியிடம் துர்நாற்றத்தை கண்டேன்

மஞ்சளிடம் மண்ணைக் கண்டேன்

இயற்கையிடம் அழிவை கண்டேன்

நீரில் கிருமியை கண்டேன்

நிலத்தில் நோயை கண்டேன்

உணவில் பசியை கண்டேன்

நம்பிக்கை துரோகம் கண்டேன்

உன் விஞ்ஞான சீற்றத்தால்

என் சுவாசம் விஷமாய் மாறக் கண்டேன் ...!

No comments:

Post a Comment

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

mhishavideo - 145