எது அழகு ...?


வானத்தை வருடி கானத்தை
தந்து ஞானமாய் வாழும்
மனிதனுக்கு சுவாசமாய்
மாறும் காற்றில் எது அழகு ...?

மேகமாய் பாயிந்து பின்
சோகமாய் நீந்தி யாகமாய்
பொழிந்து தாகமாய் மாறும்
மழையில் எது அழகு ...?


இயற்கையாய் பிறந்து பின்
செயற்கையாய் உயர்ந்து
மயக்கும் பசிக்கு உணவாய்
மாறும் சுவைக்கு எது அழகு ...?

உயிராய் பிறந்து உள்ளுள்
மறைந்து நீராய் சுரக்கும்
கண்ணில் மாறா அன்பை
காட்டும் கண்ணீரில் எது அழகு ...?

இப்படி மறையும் மண்ணில்
விதையாய் வாழும் உருவில்லா
அழகை மறந்து முக அழகே
உன் முன்னால் அக அழகாய்
தோன்றுவதை கண்டு வளியும்
மனிதனே

உன் அழிவைத் தேடாதே
மனதை நேசி மார்க்கம் உண்டு
உறவை நேசி
உலகமே உன்னை நேசிக்கும் ...!

No comments:

Post a Comment

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

mhishavideo - 145