நீ ஆயிரம் தவறுகள் செய்தாலும்
அன்பே என்
ஆறுயிர் மறக்கவில்லை
காதல் வலியால்
கடமை மறந்து
கானல் நீரில் என்
கன்னம் சிவக்கிறது
அது மட்டுமா ?
பஞ்சு மேனியில்
நஞ்சு கலந்ததுபோல்
உன் ஞாபக அலைகள்
என் எண்ணக் கனவில்
வண்ண கோலமிட்டதால்
நாணத்தில் கண்கள் சிவக்கிறது
வானம் சிவந்தால்
கானம் பாடும் குயிலைப் போல்
என் காதல் சிவந்ததால்
என் இதயமும் கனமாகி
உதயமாகும் துடிப்புகள்
இதமாய் பாடியதால்
மூச்சும் சிவக்கிறது ...!
No comments:
Post a Comment
இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!
தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்
தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...