கோலங்கள் ...!


இதய வாசலில்
உதயமாகும் சூரியனை
கண்டதால்

மாவிலைக் கோலமாய்
பூவிழி முத்தத்தில்
சத்தமிலாத
சலங்கை ஓலியால்
சாகிரம் வரைந்தேன்

நாவீரம் கொண்ட
ஈ எறும்பிற்கும்
இனிய உணவாக

கலை முதல் மாலைவரை
கண் திருஷ்டி காவியமாய்
உன் காலடி தாங்கும்
கைவிரல் கோலத்தில்

வினை தீர்க்கும்
மனைக்கு வெற்றி
புள்ளியாய் சேருகிறேன்
முற்றுப்புள்ளி கோலத்தில் ...!

No comments:

Post a Comment

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

mhishavideo - 145