வாழட்டும் என் காதலும்...!


எண்ணிரண்டு வயதினிலே
கண்ணிரண்டு ஆசைகளை
கட்டி வைத்துக் காத்திருந்தேன்

தட்டிக் கொடுத்த தந்தையும்
தொட்டில் தந்த அன்னையும்
பொத்தி வைத்த பசங்களை
மீறியும் கத்தி போல்
பாயிந்த உன் காதல் அன்பு

என் இதயத்தில் இன்பமாய் பூத்த
கண்ணீர் முத்துக்கள் அலை அலையாய்
அடித்துச் சென்றாலும்
கரை சேராத காதலைக்
கற்றுக் கொண்டேன்

பற்று வைத்த வரவாய் மீதியனேன்
பாவியவன் பஞ்சணையில்
சாகும் வரம் தந்து விட்டு
சென்று விட்டான் தனிமையில்

இப்போது
மீண்டும் வருவான்
என் மீது காதல் அம்பை தொடுவான்
என்று காத்திருந்தேன்
காதலர் தினத்தை நோக்கி
வாழட்டும் என் காதலும் ....!

No comments:

Post a Comment

இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!

தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்

தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...

mhishavideo - 145