துள்ளி வரும் நினைவலையே
உன்னை அள்ளிச் செல்லும்
விழியில் பள்ளி கொள்கிறேன்
பஞ்சணையில்
காதல் வசப்பட்டதால்
கனவுகள் பூக்கும் கட்டிலில்
குழந்தையாய் உறங்கும்
இரவுகள் கூட என்னை
தட்டிபாக்கிறது ....!
நித்தம் ஒரு கனவு
அதில் சத்தமில்லா நாம் உறவு
ஜனனம் கொள்ளும்
கனவு கோட்டையில்
நினைவுகள் பாதிக்கும்
நிமிடங்கள் கூட எட்டிபாக்கிறது ...!
அய்யோ தட்டி தட்டி பாக்கிறேன்
என் தாயிமையில் பூக்கும்
காதல் மகரந்தம்
தலைமுறை கானதா என்ற
கற்பனை விதையில்
அன்பே நீரூற்றி பார்
நானும் மலருவேன்
காதல் கொடியாய்
உன் கற்பனையில் ....!
No comments:
Post a Comment
இப்பிளாக்கில் வரும் கதை கட்டுரை கவிதை அனைத்தும்
வெறும் கற்பனையே!
தங்கள் வருகைக்கும் பதிவு குறித்த கருத்திற்கு அன்பு நன்றிகள்
தொடர்ந்து வாருங்கள் கருத்தை தாருங்கள் ...